வவுனியாவில் வர்த்தக நிலையம் முன்பாக சடலம் மீட்பு!

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலமானது இன்று (15.05.2023) மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,  வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி நபரொருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொதுநபரொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபரின் சுவாசத்தினை பரிசோதித்த போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சடலம் தடவியல் பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் பொலிஸார் பாதுகாப்பு செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த நிலையில் காணப்பட்டவர் யாசகத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews