சிங்கள பௌத்த பேரினவாத அரசு அண்மைக்காலமாக தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டிருக்கிறது….! தமிழ் தகனகரத்தினம் சுகாஸ்

சிங்கள பௌத்த பேரினவாத அரசு அண்மைக்காலமாக தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொண்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் திருகோணலையில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குருந்தூர்மலை, தையிட்டி, வெடுக்குநாறிமலை என சீண்டிய இந்த பௌத்த பேரினவாத அரசு இன்று தமிழர் தாயகமாம் திருகோணமலையுடைய வில்லூண்டி முருகனுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து, நியூசிலாந்தில் இருந்து பிக்குகளை கொண்டு வந்து நாளடை உயரத்தில் சிறை வைக்கப் போகின்றார்களாம். இது தமிழர்களை சீண்டுகின்ற செயற்பாட்டின் அதி உச்சம். இதை நாங்கள் அனுமதிக்கப் போவது கிடையாது.
தமிழர்களுடைய தாகயத்தை திட்டமிட்டு கபளீகரம் செய்கின்ற செயற்பாட்டில் ரணில், ராஜபக்ச அரசாங்கத்தின் வீச்சு தீவிரம் பெற்றுள்ளது. இதற்காக தமிழ் மக்களாகிய நாம் ஜனநாயக ரீதியில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில் இன்றைய தினம் தலைநகரான திருகோணமலையிலே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்த இடத்தில், சரத் வீரசேகர, விமல் வீரவம்ச போன்ற சிங்கள பௌத்த பேரினவாத ஒட்டுமொத்த வடிவத்திற்கும், அவர்களுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் நாங்கள் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம்.
நீங்கள் எங்கள் மீது ஆக்கிரமிப்புகளை திணித்துக் கொண்டிருந்தால், ஒரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறு தாக்கம் இருக்கும். அதற்கு இணையாக தமிழ் மக்களும் எழுச்சி கொண்டு கொண்டே இருப்பார்கள்.
உங்களுடைய ஆக்கிரமிப்புக்கள் எங்களுடைய விடுதலைக்கான வேட்கையை ஒருபோதும் தணிக்காது. அது இன்னமும் எங்களை வீறு கொள்ளவே வைக்கும் என்ற செய்தியைச் சொல்லி, இறுதிவரை இந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போராடவோம் என்ற அந்த செய்தியையும் சொல்லி வைக்க விரும்புகிறோம் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews