நஞ்சருந்திய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பலி! கொரோனா தொற்றும் உறுதி..

நஞ்சருந்திய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 11 வயதான சிறுமி உயிரிழந்த நிலையில் கொரோன தொற்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.எழுதுமட்டுவாழ் – கரம்பகம் பகுதியை சேர்ந்த 11 வயதான சிறுமி தாய் பேசியதால் நஞ்சை குடித்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews