யாழில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!

யாழ்.வண்ணார்பண்ணை பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(07.05.2023) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது 18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வளர்க்கப்படும் ஆடொன்று குட்டி ஈன்றதனால், குறித்த மாணவர் அதனை வேறோர் இடத்துக்கு மாற்ற முற்பட்டுள்ளார்.

இதன்போது அருகில் இருந்த பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழியில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மாணவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மழை பெய்துகொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்சார தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews