கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று( 07.05.2023)  ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி – ஏ-09 வீதியிலிருந்து ,பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பட்டா ரக வாகனம் ஒன்று சமிக்ஞை எதுவுமின்றி திடீரென திருப்பியபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews