க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து ஆசிரியர் சங்க செயலாளர் கருத்து!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தீர்மானம் இன்றும் ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து ஆசிரியர் சங்க செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் அழகியல் பாட செயன்முறைப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்றி வெளியிடப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews