விபத்தில் உயிரிழந்த கன்றை, கண்ணீருடன் காவல் காத்த தாய்ப் பசு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, வீதியோரம் நின்ற மாட்டுக் கன்றொன்ரை வாகனமொன்று மோதித் தள்ளிக் காயப்படுத்தியது. அருகே மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, தனது கன்று காயமடைந்து உயிருக்குப் போராடுவதை அவதானித்து, அதனருகே சென்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டது.

வாகனம் மோதி காயமடைந்த இளங் கன்று, நீண்ட நேர போராட்டத்தின் பின் உயிரை விட்டது. அருகே நின்ற தாய்ப் பசு, கண்ணீர் மல்க, கன்றை விட்டுப் பிரியாது நின்றமை, ஆலயச் சுற்றாடலில் நின்றவர்களின் மனதைக் கண்கலங்க வைத்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews