மருதோன்றி ஈச்சரர் மகிமை மீட்டும், சுவாலை எனும் எரியும் சொல்லில் ஒரு சிவயாகம் எனும் இறுவெட்டு வெளியீடு…..!

மருதங்கேணி மாசார் எல்லையில் மருதங்கேணி முடங்கு பாலத்திற்க்கு அண்மையில் கடந்த சிவராத்திரியன்று வந்து குடியேறிய  மரிதோன்றீச்சரர் ஆலயத்தின் மருதோன்றி ஈச்சரர் மகிமை மீட்டும், சுவாலை எனும் எரியும் சொல்லில் ஒரு சிவயாகம் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு 30.04.2023 பிற்பகல் 4:00 மணியளவில் ஆலய முன்றலில் ஆலய அறங்காவலர் சபை தலைவர் வே.சிவராசா  தலமையில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. முதலாவதாக சுடரினை வெற்றிலைக்கேணி பிள்ளையார் ஆலய குரு சிவசிறி யோக சம்மந்த குருக்கள், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, இலங்கை தமிழரசு கட்சிநபொருளாளர். இளைஞர் அணி தலைவர் மா.கலையமுதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் இ.முரளிதரன், ஜன நாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், கவிஞரும் பாடலாசிரியருமான யாழ் மருதன், ஆலய குரு, முன் நாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தேசிய அமைப்பாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன், உட்பட  பலரும் ஏற்றியதை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. ஆசி உரையினை வெற்றிலைக்கேணி பிள்ளையார் ஆலய குரு சிவசிறி யோக சம்மந்த குருக்கள் நிகழ்த்தினார்.
வரவேற்புரையினை கலைஞர் வி.ஜே.நிதர்சன் நிகழ்த்தியதை தொடர்ந்து  தலமை உரையினை நிகழ்வின் தலைவரும் ஆலய அறங்காவலர் சபை தளைவருமான வே.சிவராசா நிகழ்த்தினர்.
அதனை தொடர்ந்து வாழ்த்துரைகளை நிகழ்வின் விருந்தினர்கள் நிகழ்த்தியதை தொடர்ந்து
நிகழ்வின்  விருந்தினர்கள் ஆலய நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் இணைந்து இறு வெட்டினை வெளியீட்டு வைத்ததுடன் சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன.
அதனை  தொடர்ந்து கலைஞர்களான ஈழத்தின் இளைஞ கவி P S விமல், பாடலாசிரியர் புரட்சி கவி யாழ் மருதன், இசை எழுவரதி எம் பகி பாடகர் என் தயாபரன் ஆகிய கலை கௌரவிக்கப்பட்டதுடன் நிகழ்சி தொகுத்து வழங்கியவர்களான அறிவிப்பாளர் திருமாறன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் ஆலய அறங்காவலர் சபை நிர்வாகிகள், சிவனடியார்கள், அரசியல் பிரமுகர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews