சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு படையை வைத்திருக்க வேண்டும்..! தலைவர் மாவை சேனாதிராஜா.

சிலையை வைத்திருக்கிறீர்கள் அதனை பாதுகாப்பதற்கு ஒரு படையை வைத்திருக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்
மருதங்கேணி மாசார் எல்லை பகுதியில் அமைந்துள்ள.மருத ஈசுவரர் ஆலயத்தில் பாடல் இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரை  நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது.
நீங்கள் இங்கு ஒரு சிலை வைத்திருக்கிறீர்கள் ஆனால் இந்த சிலையை பாதுகாக்கவும் ஒரு படையைவைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் அண்மைக்காலமாக சைவர்கள் ஆலயங்களில் வழிபடும் போது அடுத்தநாள் அந்த சிலை இருக்குமா என்று நினைத்துக் கொண்டே வழிபடுகிறார்கள் என்று அது இந்த நாட்டினுடைய கலாசாரம் அவ்வாறே வளர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews