வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தையின் மீது தாக்குதல் -தமிழரசு உறுப்பினர் கைது!

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு
உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது
மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தியது
தொடர்பில் தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று
இணைப்பாளர் பிரதீக்குமார் இன்று
கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பகல் வெல்லாவெளி கலைமகள்
வித்தியாலய பாடசாலைக்கு முன்பாக தமிழ்
மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்
செயற்குழு உறுப்பினர் கோபாலன் பிரசாத்
மற்றும் பிள்ளை மனைவி மூவரும் மோட்டார்
சைக்கிளில் பிரயானம் செய்யும் போது
வழிமறித்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில்
பயணம் செய்த பிரசாத்தின் இரண்டரை வயது
பிள்ளை படுகாயமடைந்த நிலையில் மண்டூர்
பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தாக்குதல் நடாத்தியதாக
தெரிவிக்கப்படும் தமிழரசி கட்சியின்
போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீக்குமார்
என்பவர் வெல்லாவெளி பொலிஸாரினால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் உள்ளுராட்சிமன்ற தேர்தலில்
போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு
போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin