வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளருக்கு கொரோணா தொற்று உறுதி…..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும் நேற்று முன்தினம் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளாதக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக மக்களுக்கான தனது கடமைகளை அலுவலகத்தில்  மூடிய கணணாடி அறையிலிருந்து ஆற்றிவந்த நிலையிலும் அவருக்கு கொரோணா தொற்றியுள்ளமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது கொரோணா தொற்று அதிகரித்துள்ளது நிலையில் மக்களை தேவையற்று சந்திக்காமல் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதேச செயலர் திரு பிரபாகரமூர்த்தி ஏற்படுத்தியிருந்ததுடன் அவரது நெருங்கிய சகாவான ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவர் அடிக்கடி அவரது அலுவலகத்தில் சந்தித்து வந்துள்ள நிலையில் அவருக்கும் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews