பணத்தை எங்கேயாவது திரட்டுங்கள் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தியே ஆக வேண்டும் ..யாழ் அரச அதிபர் .

இவ்வருடம் 2023 பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு எங்கேயாவது பணத்தை திரட்டி நடத்த வேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளாராம்.
அதாவது 2023 ஆம் ஆண்டு இவ்வருடம் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிரதேசமட்ட கலாச்சார போட்டிகளை நடாத்துவது தொடர்பில் யார் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அரச அதிபர் இவ்வருடம் நடாத்தப்பட வேண்டிய பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் எவ்வித தடையும் இன்றி நடாத்தப்பட வேண்டும் எனக் கூறினாராம்
 அரச அதிபர் இவ்வாறு கூறிய போது அதில் கலந்து கொண்ட சில பிரதேச செயலாளர்கள் சேர் நடத்துவதற்கு எங்களிடம் பணம் இல்லை என்ன செய்வது என ஆதங்கத்தை தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த அரச அதிபர் பணம் தருவதற்கு எம்மிடமும் இல்லை யாரிடமாவது பெற்று நிகழ்வுகளை நடத்தியே ஆக வேண்டும் பதில் வழங்கினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews