பளையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது!

பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் மூவரையும் திடீர் சோதனையிட்ட போது ஒருவர் உடமையில் 35மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளும் மற்றவரிடமிருந்து 29மில்லி கிராம் போதைப்பொருளுமாக மொத்தம் 64மில்லி கிராம் ஹெரோயினுடன் பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைதானவர்கள் யாழ்மாவட்டம் மற்றும் பளை அரசர் கேணி மற்றும் வண்ணாங்கேணி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் நாளை கிளிநொச்சி நீதவான்‌‌ முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார்‌ தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews