இன்று சுட்டெரிக்கும் சூரியன் – வெளியாகிய எச்சரிக்கை..!

யாழ்ப்பாணம் – நல்லூர் மற்றும் கிளிநொச்சி மாவட் டத்தில் பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்று சனிக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதனால் இப்பகுதிகளில் இன்று கடும் வெப்பநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்பம் அதிகமாகவுள்ள நிலையில் மக்கள் இயலுமான வரை வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நண்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பது உகந்தது.

போதுமான அளவுக்கு நீராகாரங்களை அருந்து வதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews