கடன் வழங்குநர்களுடன் ஈடுபாட்டை பேண, இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது : ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும், ஈடுபாட்டை பேணுவது தொடர்பில், இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான செயன் முறையை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது, இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் இணைந்து இந்த முக்கியமான கூட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு, ஜப்பானுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக, இருதரப்பு கடன் வழங்குனர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஆரம்பத்தை இது குறிக்கின்றது.

இதனைத்தொடர்ந்து, கூடிய விரைவில், கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கு, கடன் வழங்குநர்கள் முன்வருவார்கள். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நம்பிக்கை வெளியிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews