உலக ஜனநாயக தினத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படலாம் என, முன்னாள் தேர்தல் ஆணையாளர் நம்பிக்கை

சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக, முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கையின் இறுதி வரைவு கையளிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின், பிரதேச எல்லைகள் மாற்றப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள், வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில், எந்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews