ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த எம்.பிக்கள் குழு இதற்கான உடன்படிக்கையை ஜனாதிபதிக்கு பல வழிகளின் ஊடாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களில் சிலர் தாம் ஜனாதிபதியுடன் இணைந்துகொள்வதாக தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிகக் குறுகிய காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார்கள் எனவும் லக்ஸ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews