மட்டு நகரில் வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவைத்த மோட்டர்சைக்கிள் ஒன்றை திருடிய ஒருவர் கைது !!

மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இடம்பெற்றுவரும் காணிவேல் விழாவிற்கு சென்ற வாகன தரிப்பிடத்தில்; நிறுத்திவைத்த மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒருவரை 35 வயதுடைய ஒருவரை நேற்று சனிக்கிழமை (01) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மைதானத்தில் இடம்பெற்றுவரும் காணிவேல் விழாவிற்கு குடும்பசகிதமாக களுவாஞ்சிக்குடியில் இருந்து சம்பவதினமான வியாழக்கிழமை (30) இரவு சென்று அந்த பகுதியிலுள் வாகனம் பாதுகாக்கும் பகுதியில் மோட்டர்சைக்கிளை நிறுத்திவிட்டு அதற்கான 20 ரூபா பணத்தை வழங்கிவிட்டு திறப்பை மோட்டர் சைக்கிளிலே மறந்து விட்டு விட்டு காணிவேலுக்கு சென்று பின்னர் திரும்பிய  6 .லச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான டியோ ரக மோட்டர்சைக்கிள் தீரட்டுபோயுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையடுத்து அந்த பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள சிசிரி கமராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிளை விற்பதற்காக கொண்டுவந்த நிலையில் திருடனை நேற்று கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிளையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews