செல்லப்பா சுவாமிகளின் 108 வது குருபூஜை தினம்

செல்லப்பா சுவாமிகளின் 108 ஆவது குருபூஜை தினம் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இருக்கின்ற செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் 108வது குருபூஜை தினம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ் குருபூஜை தின வழிபாட்டில் செல்லப்பா சுவாமிகளின் பக்த அடியவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் பக்திப்பாடல்கள் இசைத்தும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததனை அவதானிக்க முடிகின்றது.
கடையிற் சுவாமிகளின்  சீடரான வலம்வந்த  செல்லப்பா சுவாமிகளிற்கு   தீட்சையும் உபதேசமும் கடையிற் சுவாமிகளினால் வழங்கப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகின்றது. செல்லப்பா சுவாமிகளின் வாசகமாக “எப்பவோ முடிந்த காரியம், நாம் அறியோம், ஒரு பொல்லாப்பும் இல்லை, முழுதும் உண்மை” என்கின்ற வாழ்கைக்கு பல்வேறு படிநிலைகளில் கருத்துக்களை கூறும் மகா வாக்கியங்களை மக்களுக்கு போதிதுள்ளமை விசேட அம்சமாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews