கஞ்சா கடத்திய நபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் முச்சக்கரவண்டியில் சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்திய நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பீட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், முச்சக்கரவண்டி யின் இசைக்கருவியில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கிலோ 800 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது மீசாலை கிழ க்குப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்து வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews