வடக்கு மாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாகாணமட்ட போட்டிகள் இன்று ஆரம்பமானது

வடக்கு மாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாகாணமட்ட போட்டிகள் இன்று ஆரம்பமானது. குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி உள்ளக விளையாட்ரங்கில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழவில், மாகாண பூப்பந்தாட்ட சம்மேள தலைவர், 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று ஆரம்பமாகும் குறித்த போட்டியில் 500க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றுவதுடன், நாளை மற்றும் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews