மின்சாரசபை ஊழியரின் கையை வெட்டி எடுத்துச் சென்ற நபர்! பொலிஸார் தீவிர விசாரணை… |

மின்சாரசபை ஊழியர் ஒருவரின் கையை வெட்டிய நபர் ஒருவர் துண்டிக்கப்பட்ட கையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

குறித்த சம்பவம் மொரட்டுவ – கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் மொரட்டுவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,

துண்டிக்கப்பட்ட கை பாகங்களை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர் தன்னை தாக்கிய சந்தேக நபர் குறித்து தகவல் வழங்கியுள்ளதாகவும் சம்பவம் இடம்பெற்றவுடனேயே அவர் அந்த பகுதியை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது கை முழங்கைக்கு கீழே உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட நிலையில் அதனை தாக்கியவரே எடுத்துச் சென்றுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews