மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் மரணம்…..!

உடுப்பிட்டி  பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அந்த கம்பி  பிரதான மின் இணைப்பு கேபிளுடனத தற் செயலாக இணைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்நகாரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இளைஞன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான்.
மரணமடைந்தவர்  27 வயதுடைய நிலக்காடு காரைநகரை  சேர்ந்த குமாரசாமி சுதன் எனும்  ஒரு குழந்தையின் தந்தையாவார்.
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை  போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews