ஆசிரியர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு – வடக்கில் பல பாடசாலைகள் மூடப்பட்டது!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டும் போராட்டத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வடக்கு மாகாணத்திலும் பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இதனால், பாடசாலைக்கு வந்த மாணவர்களும் பாடசாலை இல்லை என தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டும் போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட ஆசிரியர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

பாடசாலைகளுக்கு ஒரு சில ஆசிரியர்களும், மாணவர்களும் வருகை தந்திருந்த நிலையில் தவணைப்பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தது.

இதேவேளை, பாடசாலைகளின் பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்ததுடன் மாணவர்கள் திரும்பி சென்றதையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews