எட்டு மாதங்களில் தான் நாட்டை மீட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

நாட்டை மீட்க நான்கு வருடங்கள் எடுக்கும் என்றார்கள். ஆனால், தான் எட்டு மாதங்களில் மீட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, தேர்தல் நடந்தால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. பொருளாதாரத்தை பலப்படுத்தவேண்டும்.
இந்த நாட்டை மீட்க நான்கு வருடங்கள் எடுக்கும் என்று சிலர் தெரிவித்திருந்தனர். ஆனால், நான் எட்டு மாதத்தில்நிறையவே செய்துள்ளேன் என குறிப்பிட்டார்.

அடுத்த மாதம், தொடக்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், அதன் மூலம் மக்களுக்கு வரியைக் குறைத்து நிவாரணம் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்

தற்போது பந்து எமது பக்கம் வந்துவிட்டதால், ‘துடுப்பாட்டம் செய்ய தயாராகுங்கள்’ என ஜனாதிபதி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews