மட்டு.கல்லடி சைவ மங்கையர் கழக மகளிர் தின நிகழ்வு.

மட்டக்களப்பு கல்லடி சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது. சைவ மங்கையர் கழகத்தின் தலைவி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில், அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கென்னடி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் மைதிலி பாத்லெட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்லடி பிரதேச மங்கையர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்லடி சைவர் மங்கையர் கழகம், சுயதொழில் பயிற்சி ஊக்குவிப்புகளை வழங்கி வருகிறது.
2023 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் வீட்டுத் தோட்ட பயிர் செய்கையினை ஊக்கிவிக்கும் வகையில் பயிர்க் கன்றுகளும் வழங்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews