யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவானது.. |

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிராகாஷ் (வயது26) மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.நெடுந்தீவை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர், பருத்தித்துறையை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவரும், கந்தர்மடத்தை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும்,

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அல்வாயை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவருமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்திருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews