மட்டு வவுணதீவில் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட யாழ் மாவட்ட முன்னாள நாடாளுமன்ற  உறுப்பினர் மாமனிதர் கிட்ணன் சிவநேசன் 15 ம் ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை (06)  மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் வவுணதீவு நாவல்தோட்டம் மாரியம்மன் ஆலையத்தின் முன்னால் இடம்பெற்றது

இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர்; கலந்து கொண்டுனர்.

இதன் போது மாமனிதர் கிட்ணன் சிவநேசன் திருவுருவ படத்திற்கு மாவீரர் கங்கா வின் தாயாரான தம்பிபோடியார் அமராவதி ஈகைச்சுடர் ஏற்றியதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் மலர் மாலை அணிவித்துடன் கலந்துகொண்டவர்கள் அன்னாது ஆத்மசாந்தி வேண்டு  மலர் தூவி  இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews