கிளிநொச்சியில் அரச பேருந்திலிருந்து கஞ்சா மீட்பு

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (02.03.2023) பதிவாகியுள்ளது.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து கிளிநொச்சி – பூநகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தில் இரண்டு பொதிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews