இராணுவத்தால் பெண் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட தும்பளை கிழக்கு பகுதியில் பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனர்ல ரவி ரட்ணசிங்கம் ஒழுங்கமைப்பில் வன்னி ஆதாரம், ஒனடா  ஜீவ மீட்பரின் தமிழ் திருச்சபை,மோதறை  லயன்கழக ஆதரவில் 551 வது படைப்பிரிவின் ஆளணி  அனுசரணையுடன் வீடு ஒன்று இன்று கட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை  கையளிக்கும் நிகழ்வு 551 வது படை பிரிவு தளபதி  பிரிகேடியர்  யூட் காரிய கரவல
தலமையில் காலை 10:30 மணிக்கு இடம் பெற்றது.
இதில் யாழ் மாவட்ட இராணிவ தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண பொதோட்ட பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக 55 வது பொது படையணி தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன,  கௌரவ, மற்றும்  வீட்டு பயனாளி  ஆகியோருடன் இணைந்து வீட்டை சம்பிர்தாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
இதில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் அழ்வாப்பிள்ளை சிறி, பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சார்பாக பொலிஸ் பரிசோதகர் சேந்தன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலீசார், மதகுருமார் இராணிவ அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews