கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள அரச வங்கிகள் முழுமையாக பூட்டப்பட்டுள்ளதுடன், சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் வங்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதேவேளை மின்சார சபையின் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு செல்லாது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை, அவசர சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews