இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்…!

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வடக்கு கடற்கரையில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தில்,இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு (06:28 GMT)  நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது.

இதன்போது வர்த்தக நிலையமொன்று சரிந்து வீழ்ந்ததாலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அனர்த்த தணிப்பு முகவரகம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews