ஏ.எச்.எம்.பௌஸி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

ஏ.எச்.எம்.பௌஸி இன்றைய தினம் (09.02.2023) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் அவர் இவ்வாறு பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இந்த பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கட்சியின் தீர்மானத்துக்கமைய, ஏ.எச்.எம்.பௌஸியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews