யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியேற்றும் கம்பத்தில் கறுப்பு கொடி!

சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக தேசிய கொடியேற்றும் தம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் கிடைக்காமையால் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  யாழ்ப்பாண  பல்கலைக்கழகதேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் கறுப்பு கொடி  ஏற்றப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews