யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் .

Recommended For You

About the Author: Editor Elukainews