இலஞ்சம் பெற்றவேளை பிடிபட்டார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி

பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை தீர்ப்பதற்காக ஒருவரிடம் இருந்து மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் மதவாச்சி காவல்துறை பிரிவின் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் இன்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி , மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரி , புகார்தாரருக்கு எதிரான பலாத்கார வழக்கு தொடர்பான மற்ற தரப்பினரை சமரசம் செய்து வைப்பதற்காகவும், மேலும் பல வழக்குகளுக்கு பிடியாணையை நிறைவேற்றாமல் இருக்கவும் இந்த மூன்றரை இலட்சத்தை இலஞ்சமாக புகார்தாரரிடம் கேட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews