யாழில் பிறந்து முப்பது நாட்களேயான குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புத்தூர், நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையொன்று தாய்ப்பால் புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு திடீரென பால் புரையேறியதையடுத்து குழந்தை அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் 31-ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் குழந்தையின் இறப்புச் சம்பவம் குடும்பத்தை  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews