கேரளா கஞ்சவுடன் ஈபிடீபி வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் கைது…..!

49 கி.கி. கேரள கஞ்சாவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பருத்தித்துறை பிரதேச சபை, மருதங்கேணி வட்டாரத்திலிருந்து விகிதாசார  வேட்பாளர் ஒருவர்  உட்பட மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது  கடந்த 25 ஜனவரி 2023 அன்று  நெடுந்தீவு கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

கடற்படையின் விசேட ரோந்து    நடவடிக்கையின் போதே நெடுந்தீவு கடற்பரப்பில் குறித்தநகைது இடம் பெற்றுள்ளதுடன்  20 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கடலில் வீசப்பட்டிருந்த 29 கிலோகிராம் கஞ்சாவுமாக மொத்தம் 49 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவும், கைது செய்யப்பட்டவர்களும் நீதிமன்ற நடவடிக்கைகளிக்காக நெடுந்தீவு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews