யாழில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்களின் அராஜக செயல்!

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றை நான்கு பேர் கொண்ட குழுவொன்று தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (20) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த குழு வீடு மற்றும் உந்துருளியை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews