இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று 3 வது தொடர் கருத்தரங்கு…..!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 3 வது தொடர் அமர்வு இன்று (13/01/2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை, மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் முதலாவது அமர்வு கடந்த. மாதம் (02/12/2022) இரண்டாம் திகதி ஆரம்பமானது.அவ் அமர்வில் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையையும், இரண்டாவது அமர்வில் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் 13 வது அரசியல் யாப்பு தொடர்பாக உரையாற்றினார்.. இதே வேளை உரை நிகழ்த்திய இருவரும் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

குறித்த இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலின் தொடர்ச்சியாக. நாளைய தினம் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் “தமிழ் மக்கள் பேரவை மற்றும் வடக்கு மாகாணசபை முன்வைத்த தீர்வு யோசனைகள்.” எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.இதில் ஆர்வலர்கள், அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews