தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் திடீர் சந்திப்பு!

இறுதி தீர்மானம் நாளை அறிவிப்பு

தமிழ் தேசிய கட்சிகளின் அவசர ஒன்று கூடல் ஒன்று இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் எட்டப்படாததால் நாளை கட்சி தலைவர்கள் மீண்டும் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகதின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சபா குவதாஸ், விந்தன் கனகரெத்திம், க.சர்வேஸ்வரன், யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews