இலங்கை முதல் உதவி சங்கம் இந்து சமயத் தொண்டர் சபையால், திருவாசக முற்றோதல்…..!(வீடியோ)

இலங்கை முதல் உதவி சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை ஏற்பாடு செய்த திருவாசக முற்றோதல் இன்று காலை 10:00 மணிமுதல் பிற்பகல் 5:00 மணி வரை நாற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை tசணாமூர்த்தி திருக்கோயிலில் இடம் பெற்றுள்ளது.

இலங்கை முதல் உதவி சங்க தேசிய ஆணையாளர்  .வை.மோகனதாஸ் தலமையில் இடம் பெற்ற இத் திருவாசக முற்றோதலில் இலங்கை முதல் உதவி சங்க தொண்டர்கள். கண்காணிப்பாளர்கள், இந்து சமய தொண்டர்கள், மற்றும் ஓதுவார்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருவாசக ஓதலில் ஈடுபட்டனர்.

மேலும் இலங்கை முதல் உதவி சங்கம், இந்து சமய தொண்டர் சபையில் இணைந்து சமய சமூக பணிகளில் ஈடுபட்டவர்களை இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஆலோசகரும் இந்து சமயவிவகாரங்களுக்கான இணைப்பாளருமான கவிஞரும் அர்ச்சகருமான சிவஸ்ரீ குமார சுவாமி நாதக் குருக்கள், சான்றிதழ்களை வழங்கி கௌரவித்ததுடன் ஆன்மீக உரையினையும் நிகழ்த்தினார்.

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews