பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!

2021ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ளோர் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை மற்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைக் கருத்தில்கொண்டு விண்ணப்பக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கும், உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையில் நடத்துவதற்கும் கல்வி அமைச்சால் கடந்த ஜுலை மாதத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews