![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/சினோபார்ம்.jpg)
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன என்று இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால், இதுவரை சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடி 80 இலட்சமாக அதிகரிக்கும்.
அத்துடன், இம்மாதத்தில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சமாகவும் மாறும் என்றும் சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.