காபூல் விமான நிலையத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு 13 பேர் பலி….!

 

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்தில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது

ஆப்கானிஸ்தானில் உள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி, விமான நிலையத்துக்கு வெளியே வந்த நபர் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டதாக தமக்கு தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.

அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தில் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், விமான நிலையத்துக்கு வெளியே தாலிபன்களும், விமான நிலையத்துக்கு உள்ளே ஆப்கன் படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், விமான நிலைய வளாகத்திலோ அதன் வெளியிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று மேற்கு நாடுகள் இன்று காலையில் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தற்போது வெடிச்சத்தம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது

Recommended For You

About the Author: Editor Elukainews