நுவரெலியா நகருக்கு உட்பட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முன்னெடுப்பு..!

நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான மழை வானிலை நீடித்து வருகின்ற போதிலும் அதனைப் பொருட்படுத்தாது, நுவரெலியா நகருக்கு உட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது.

நுவரெலியா மாநகர சபையின் குடும்ப சுகாதார சேவை காரியாலயத்தில், சினோபார்ம் முதலாவதுத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா நகருக்கு உட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்ட சுமார் 3,000 பேருக்கு, இன்றைய தினம் சினோபார்ம் தடுப்பூசியை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும் சுமார் 5,000க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews