![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/0_IMG-20210826-WA0009-818x490.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-20210826-WA0008-225x300.jpg)
பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை சோதனையிட்ட போது அதில் கஞ்சா போதைப்பொருள் கடத்தி வரப்பட்டமை கண்டறியப்பட்டது.![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/0_IMG-20210826-WA0009-300x225.jpg)
கடற்படையினரின் படகைக் கண்டவுடன் சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடலில் வீசிவிட்டனர்.
அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அவற்றைக் கடத்தி வந்த பருத்தித்துறை தும்பளை மற்றும் கொட்டடியைச் சேர்ந்த 22,26 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 4 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கடற்படையினர் கூறினர்.சந்தேக நபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை சோதனையிட்ட போது அதில் கஞ்சா போதைப்பொருள் கடத்தி வரப்பட்டமை கண்டறியப்பட்டது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/0_IMG-20210826-WA0009-300x225.jpg)
கடற்படையினரின் படகைக் கண்டவுடன் சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடலில் வீசிவிட்டனர்.
அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அவற்றைக் கடத்தி வந்த பருத்தித்துறை தும்பளை மற்றும் கொட்டடியைச் சேர்ந்த 22,26 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 4 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கடற்படையினர் கூறினர்.சந்தேக நபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்