சூட்சமமான முறையில் கஞ்சா ஏற்றி வந்தவர்கள் பளை பொலிசாரால் கைது!

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி கப்ரக வாகனத்தில் கங்சா ஏற்றி வருவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதிதியில் வைத்து 29கிலோ 150கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூட்சமமான முறையில் கப்ரக வாகனத்தில் ஒழித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலரத்ன தலைமையில்  தீவிர சோதனையின் பின் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்ட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் இன்று (26)கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முறபடுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews