யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22.11.2022) மாலை கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிலிருந்த ஒரு பவுண் தங்க தோடு, இருபதாயிரம் ரூபா பணம், முப்பது   பால்மா பெட்டி ஆகியன கொள்ளை கும்பலால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா இந்துகல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்த தருணத்தில் இனந்தெரியாத கொள்ளை கும்பல் மர்மமான முறையில் வீட்டுவளாகத்திற்குள் நுழைந்து தமது கைவரிசையை காட்டியதோடு, நூதனமான முறையில் பெறுமதியான தங்கத்தோடு, இருபதாயிரம் ரூபா பணம், முப்பது அங்கர் பால்மா பெட்டி ஆகியவற்றை கொள்ளை கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (23.11.2022) வீட்டின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews