மாணவனைப் தாக்கிய இந்து கல்லூரி ஆசிரியர் பிணையில் விடுவிப்பு..!

யாழ் இந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும்  மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்றைய தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் தரம் 10 சேர்ந்த மாணவனை தரம் 11 வகுப்புக்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் ஒருவர் தடிகளை கொண்டு தாக்கியதுடன் பின்னர் கையால் முகத்தில் அறைந்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் நீதிமன்றத்திற்கு சென்றது.
என் நிலையில் திங்கட்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த ஆசிரியரை யாழ்ப்பாண போலீசார் முற்படுத்திய நிலையில் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை எதிர்வரும் தை மாதம் 17ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews